Wednesday, February 8, 2023

உயிரின்றி நான்!!!!

என்னையும் என் உள்ளம், 
உணர்வு,உணர்ச்சிகள் என அனைத்தையும்பகிர்ந்து 
கொள்ளும் ஓர் உயிர் நீ மட்டுமே!

இன்று நானும் என் மனமும்
தனிமையில் தத்தளிக்கின்றோம்
கைக்கு எட்டும் தூரத்தில் நீ
இருந்தும் உள்ளக் குமுறல்களை 
உன்னிடம் சொல்ல முடியவில்லை! 

 உன் காதல் பரிசை 
தொலைத்தேனே ஒழிய
எந்த வேசியிடமும் அடமானம் 
வைக்கவில்லை! 

நான் உன்னிடம் சத்தியவானாய்
வாழ்ந்தேன். ஆனால்
அந்த ஒரு கேள்வியில்
என்னை பொய்யனாக்கி 
உயிருடன் கொன்று விட்டாய்! 

நீயும் உன் நம்பிக்கையும் இன்றி  
இன்று நான் வெரும் பிணமே! 

உடலும் உள்ளமும் சோர்ந்து விட்டது
ஓய்வெடுக்க மனம் 
கல்லறையை தேடுகிறது
அப்பா என்ற ஓசையொ 
என்னை கல்லறைக்கு செல்ல
விடாமல் தடுக்கிறது. 

இறைவா நானும் மனிதன் தானே
ஏன் இப்படி என்னை தினம் தினம்
மரணிக்க செய்கின்றாய்? 
காப்பாற்று இறைவா என்னை காப்பாற்று!!!!!!!!!!!! 
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭



Wednesday, January 25, 2023

மரியாதை

முகபுத்தகத்தில் வந்த
பொய் முகத்திற்கு கூட
என் மரியாதை போய்விட்டது!
😢😢😢😢😢

Friday, September 2, 2022

துரோகி

நான் துரோகி தான்.
ஆனால்
நம்பிக்கை துரோகி இல்லை. 

Wednesday, July 13, 2022

கடவுளே காப்பாற்று

 ஏன்?

சரியா?

யார் தவறு?

இருபது வருடங்களின் ஏக்கம். இருவது நொடிகளில் அழித்து விட்டாள்.

என்ன செய்வேன்? எவ்வாறு என்னை மாற்றிக் கொள்வேன்?

மாற்றிக் கொள்ள முடியுமா? கடவுளே...

நான் கூட தவறு செய்ய ஆசைப்படுகிறேன் எனக் கூறி உண்மையாய் இருந்து விட்டேன். ஆனா‌ல் அவள்?   என்னை புரிந்து கொண்டாள் என நான் நம்பிய அவள்? 😭😭😭😭

ஆண்டவா என்னை காப்பாற்று.. காப்பாற்று... 

Monday, April 1, 2019

போதும் மாறிவிடு யென்கிறது  அறிவு .
ஏனோ மாட்டேன் யென்கிறது  மனது .
அறிவுக்கெட்டவில்லை  மனதின்  வலி .

வாய்விட்டு அழுதேன் வலி குறைந்தது.
தொலைத்து விட்ட நம்பிக்கையை
யெவ்வாறு மீட்டெடுப்பேன்?


மஞ்சம் என்னை வெறுக்கிறது.
நான் இரவை வெறுக்கிறேன்.
கண்களோடு தலையணையும்  ஈரம்,

இவை வெறும் புலம்பல்களே!
பொருளை தேடாதே!!
ஏனனில் நான் நானாக இல்லை!!!.


நீ யென் அருகிலிருந்தும்
யேனோ  தனிமையின்  துயரம் .

Sunday, March 24, 2019

உன் நம்பிக்கை
இல்லாமையில்
புதைந்தது
என் நம்பிக்கை  
தலை
முழுகவா
தலையில்
சுமந்து
கொண்டிருக்கிறேன்?