Tuesday, December 26, 2023

கனவிலும் நீ...

இன்று லோட்டஸ் மருத்துவமனையில்
நேற்று என் பிரியா மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தேன். 
நேற்று இரவே வந்தாள் என் கனவில் என் ஆசை மகளுடன் இரு வேறு கனவுகளில். 
முதல் கனவில் என் ஆண்மையின் எழுச்சியை கண்டு ஆறு நாட்களில் எப்படி இந்த மாற்றமெற்று ஆசையாய் வருடினாள். 

இரண்டாம் கனவில் நான் அவளுடைய செல்பேசியில் அழைக்க மறுமுனையில் அவளும் என் மகளும் சேர்ந்து பாடிய பத்தி பாடல் அழைப்பிசையாய்... மெய்மறந்தேன் அன்பே!!!!

=====================================================

 என் காதலின் அர்த்தம்.

நான் இவ்வளவு நாட்களாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் பார்க்கவில்லை. உன்னோடு நேற்றைக்கு முன் தினம் தான் மருத்துவமனை தொலைக்காட்சியில் பார்த்தேன். 
அதில் சித்தார்த் தான் ஏன் திருமணம் செய்ய விரும்பறேன் என்றொரு காரணத்தை கூறுவார். அதை கேட்ட தருணம் நீ தொலைக்காட்சியை பார்க்க நான் உண்னை பார்த்து அழுதேன்...

அந்த காரணம்:
என் வாழ்க்கையில் யாரை நம்புவது என்று தெரியாது. எனவே நான் முழுவதுமாய் நம்பி என் வாழ்க்கையையும் நிகழ்வுகளையும் தினமு‌ம் 100% பகிர்ந்து கொள்ள ஒரு துணை வேண்டும்.

பிரியா நானும் உன்னை அப்படி என்னித்தானே கரம் பிடித்தேன். என் மனதில் தோன்றிய அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். ஆனால் இன்று என்னை அனாதையாக விட்டுவிட்டாய்... அதோ இங்கே புலம்பி உள்ள அத்தனையும் உன்னிடம் சொல்லி அழ ஆசை. ஆனால் சில வஞ்சகர்கள் உன்னை என்னிடம் இருந்து பிரித்து விட்டனர். இப்போது உடனிருப்பது என் மனைவி பிரியா... என் காதலியல்ல 😭😭😭😭

  மீண்டும் தொலைபேசியுன் நான்..... 

No comments:

Post a Comment