Monday, April 1, 2019

போதும் மாறிவிடு யென்கிறது  அறிவு .
ஏனோ மாட்டேன் யென்கிறது  மனது .
அறிவுக்கெட்டவில்லை  மனதின்  வலி .

வாய்விட்டு அழுதேன் வலி குறைந்தது.
தொலைத்து விட்ட நம்பிக்கையை
யெவ்வாறு மீட்டெடுப்பேன்?


மஞ்சம் என்னை வெறுக்கிறது.
நான் இரவை வெறுக்கிறேன்.
கண்களோடு தலையணையும்  ஈரம்,

இவை வெறும் புலம்பல்களே!
பொருளை தேடாதே!!
ஏனனில் நான் நானாக இல்லை!!!.


நீ யென் அருகிலிருந்தும்
யேனோ  தனிமையின்  துயரம் .

Sunday, March 24, 2019

உன் நம்பிக்கை
இல்லாமையில்
புதைந்தது
என் நம்பிக்கை  
தலை
முழுகவா
தலையில்
சுமந்து
கொண்டிருக்கிறேன்? 

Saturday, March 23, 2019

அழுகையை எழுதிட
எதேனும் மொழியில்
எழுத்துகள் உண்டோ?